March 5, 2019 தண்டோரா குழு
இரட்டை இலை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் சசிகலா, டிடிவி தினகரன் மேல்முறையீடு செய்துள்ளனர்.
தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டதை எதிர்த்து சசிகலா, டி.டி.வி.தினகரன் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கை விசாரித்த ஜி.எஸ்.சிஸ்தானி, சங்கீதா திங்ரா சேகல் ஆகியோர் அடங்கிய அமர்வு இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ்- இபிஎஸ் தரப்பு அ.தி.மு.க.வுக்கே என தீர்ப்பளித்தனர். மேலும், சசிகலா டி.டி.வி. தினகரன் ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என டி.டி.வி.தினகரன் கூறி இருந்தார்.
இந்த நிலையில் இரட்டை இலை வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து டி.டி.வி.தினகரன் மற்றும் சசிகலா தரப்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.