• Download mobile app
10 Jun 2025, TuesdayEdition - 3408
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இன்னும் சில வாரங்களில் இந்தியாவின் பிரதமர் ராகுல் காந்திதான் உறுதியாக சொல்கிறேன் – முக ஸ்டாலின்

March 13, 2019 தண்டோரா குழு

இன்னும் சில வாரங்களில் இந்தியாவின் பிரதமர் ராகுல் காந்திதான். உறுதியாக சொல்கிறேன் என திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. இக்கூட்டணியில் ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதற்கிடையில், இந்த கூட்டணியின் முதல் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முன்னதாக இன்று காலை சென்னை வந்தார். பின்னர், நாகர்கோவிலில் நடைபெற்ற பிரமாண்ட கூட்டத்தில் ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் ஒரே மேடையில் தோன்றி பேசினார்கள்.

இப்பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,

அடுத்த பிரதமர் ராகுல் காந்தி தான் என நான் துணிச்சலோடு கூறினேன்; ராகுல் காந்தியை நான் பிரதமராக முன்மொழிகிறேன். “இளந்தலைவர் ராகுல் அவர்களே, ஒளிமயமான இந்தியாவை தருக” பிரதமர் மோடி தான் மட்டும் ஒளிமயமாக இருந்து கொண்டு நாட்டை இருளில் வைத்துள்ளார். மோடி அவர்கள் புதுப்புது உடைகள் உடுத்திக்கொண்டு, நாடு நாடாக சென்றுக் கொண்டிருக்கிறார். அவர்கள் ஒளிமயமாகி வருகிறார். நாடு இருளில் தான் உள்ளது. கருப்பு பணத்தை ஒழிப்பது தான் தன் முதல் வேலை என்று சொன்ன மோடி, 15 லட்சம் வங்கிக்கணக்குகளில் போடப்படும் என்று சொன்னார். ஒரு 15000 அல்லது 15 ரூபாயாவது போட்டாரா..? துக்ளக் தர்பாரை மோடி நடத்துகிறார். மோடி ஆட்சியில் இந்தியா ஒளிமயமானதாக மாறவில்லை. இன்னும் சில வாரங்களில் நாட்டின் இளம் பிரதமராக ஆகப்போகிறவர் ராகுல்காந்தி. மக்களின் வரிப்பணத்தில் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் மோடிக்காக பத்திரிக்கை விளம்பரம். வடக்கே பட்டேல் பெயரையும், தெற்கே காமராஜர் பெயரையும் கூறி வாக்கு சேகரிக்க பாஜக முயற்சி செய்கிறது.

“ஊழல் இல்லாத ஆட்சி தருவேன் என்று மோடி ஆட்சியில் தான் ரஃபேல் ஊழல் நடந்துள்ளது. இதனை ஆதாரமாக வெளியிட்ட இந்து ராம் அவர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்து ராம் பயப்படவில்லை. அதற்காக அவருக்கு திமுக பாராட்டு தெரிவிக்கிறது. இன்னும் சில வாரங்களில் இந்தியாவின் பிரதமர் ராகுல் காந்திதான். உறுதியாக சொல்கிறேன்.மோடியை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. ஓட்டு கேட்பதற்கு கூட பாஜகவில் தலைவர் இல்லாத நிலை உருவாகி உள்ளது. தற்போது தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி ஊழல் ஆட்சி மட்டும் அல்ல, கொலைகார ஆட்சி மட்டுமல்ல, பெண்களுக்கு எதிராக அநியாய ஆட்சி. தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்”
இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க