• Download mobile app
26 Apr 2026, SundayEdition - 3728
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் – சென்னையில் 26 நிமிடங்கள் பார்க்க முடிந்தது.

March 9, 2016 tamil.oneindia.com

சென்னையில் காலை 6.22 முதல் கிட்டதட்ட 26 நிமிடங்களுக்கு சூரிய கிரகணம் ஏற்பட்டது. இதனை காண சென்னை பெசன்ட்நகர் எலியாட்ஸ் கடற்கரையில் பகுதி நேர சூரிய கிரகணத்தை காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

மேலும், வெறும் கண்களால் சூரிய கிரகணத்தை பார்க்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. பூமிக்கும், சூரியனுக்கும் இடையே சந்திரன் வருகின்ற நிகழ்வுதான் சூரியகிரகணம் ஆகும்.

சூரிய கிரகணம் அமாவாசை தினத்தில்தான் நிகழும். பொதுவாக, ஓராண்டில் 2 முதல் அதிகபட்சம் 5 சூரிய கிரகணங்கள் ஏற்படலாம்.நடப்பு ஆண்டின் முதல் சூரிய கிரகணமான இதனை இந்தோனேஷியா மற்றும் ஆஸ்திரேலியாவில் முழுவதுமாக காண முடியும். சென்னையில் காலை 6.22 முதல் 15 நிமிடங்களுக்கு சூரிய கிரகணத்தை காண முடிந்தது.

இந்நிலையில் சூரிய கிரகணத்தினைத் தொடர்ந்து திருமலையில் ஏழுமலையான் கோவில் மூடப்பட்டது. இன்று காலை 5:30 முதல் 9:30 மணி வரை சூரிய கிரகணம் நடைபெற உள்ளதால் அதற்கு ஆறு மணி நேரத்திற்கு முன் கோவில்கள் மூடப்படுவது வழக்கம்.

அதன்படி நேற்று இரவு 8:30 மணிக்கு திருமலையில் ஏழுமலையான் கோவில் மூடப்பட்டது.அதற்குள் பக்தர்கள் அனைவரையும் தரிசனம் முடித்து அனுப்ப வேண்டும் என்பதால் மாலை, 6:00 மணி முதல், தரிசன வரிசை மூடப்பட்டது. அதன்பின் ஏழுமலையானுக்கு நைவேத்தியம் செய்து கோவிலை தேவஸ்தான அதிகாரிகள் மூடினர்.

இன்று காலை சூரிய கிரகணம் நிறைவு பெற்ற பின் 9:30 மணிக்கு கோவில் திறக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்ட பின் ஏழுமலையானுக்கு பூஜைகள் செய்து காலை 11:30 மணிக்கு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

மேலும் படிக்க