• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தோனேசிய தீவுகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் 12 பேர் பலி

February 10, 2017 தண்டோரா குழு

இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவுகளில் பெய்து வரும் கன மழையால், அத்தீவில் ஏற்பட்ட மூன்று நிலச்சரிவில் 12 பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்து இந்தோனேசிய நாட்டின் பேரழிவு தடுப்பு நிறுவனத்தின் அதிகாரி வெள்ளிக்கிழமை கூறுகையில்,

“பாலி தீவில் உள்ள மவுண்ட் படூர் என்னும் எரிமலை அடிவாரத்தில் கின்ட்டாமனி மாவட்டம் உள்ளது.

அம்மாவட்டத்தில் உள்ள மூன்று கிராமங்களில் இருந்த வீடுகள் வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் சேதமடைந்தன. அதில் ஒரு வயது சிறுவன் உட்பட 12 பேர் உயிரிழந்தனர்” என்றார்.

தேசிய பேரிடர் தடுப்பு நிறுவத்தின் அதிகாரி கூறுகையில், “இச்சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளோம்” என்றார்.

“பாதிக்கப்பட்ட மக்களை அவ்விடத்திலிருந்து வெளியேற்றியுள்ளோம். அப்பகுதியில் கடும் மழை பெய்து வருகிறது. அங்குள்ள செங்குத்தான சரிவுகளில் நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் இருக்கிறது. அதனால், அந்த இடங்களில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளோம்” என்று அங்கிருந்த அதிகாரி இந்திரா கலக் கூறினார்.

“பாலித் தீவுகளில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை மழை தொடரும் என்று தேசிய வானிலை நிறுவனம் அறிவித்துள்ளது” என்றார்.

மேலும் படிக்க