• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் ! – மாவட்ட ஆட்சியரிடம் மனு

July 27, 2020 தண்டோரா குழு

இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியினர் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையைப் போல இந்து மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்து மக்கள் கட்சியின் மாநிலத் துணைத் தலைவரும் ஜோதிடர் அணியின் மாநில தலைவருமான பிரசன்னா சுவாமிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது.

இஸ்லாமிய, கிறிஸ்தவ மாணவர்களுக்கு கல்வி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இலவச கல்வி அளித்து, ஊக்கத்தொகை அந்த மாணவர்களுக்கு வழங்கப்படுவதை போல இந்து மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட வேண்டும். மேலும், கல்வி சம்பந்தப்பட்ட புத்தகங்கள் எல்லாம் இலவசமாக வழங்க வேண்டும். ஒன்றாம் வகுப்பிலிருந்து காலேஜ் வரைக்கும் ஏழை மாணவ மாணவிகளுக்கு இந்த சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள இந்த சூழலில் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலித்து வருகின்றனர் இதனை தடுக்க வேண்டும் என்று கல்வித்துறை அமைச்சர், முதலமைச்சர் என இருவருக்கும் இந்த நேரத்தில் நாங்கள் கோரிக்கை வைக்கிறோம் என்றார்.

மேலும் படிக்க