• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்துஸ்தான் அன்ட் கோ நிறுவனம் சார்பில் இலவச மரக்கன்று வழங்கும் விழா

July 4, 2022 தண்டோரா குழு

கோவை காந்திரம் பகுதியில் உள்ள இந்துஸ்தான் அன்ட் கோ நிறுவனம், நிப்பான் பயின்ட் மற்றும் ரோட்டரி கோயமுத்தூர் எலைட் இணைந்து இலவச மரக்கன்று வழங்கும் விழாவை நடத்தியது. இவ்விழாவில் பொதுமக்களுக்கு இலவசமாக 500 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், இந்துஸ்தான் அன்ட் கோ நிறுவத்தின் உரிமையாளர் பிரோஸ்தீன், ரோட்டரி கோயமுத்தூர் எலைட் தலைவர் ஜெகதீஸ்வரன், நிப்பான் பயின்ட் மண்டல மேலாளர் பிரமோத் குமார், நிப்பான் பயின்ட் தலைமை விற்பனை மேலாளர் ராகுல்,ரோட்டரியன்ஸ் அறிவுடைநம்பி, மயூர் கிக்கானி, சுரேஷ் பர்ஜான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இது குறித்து இந்துஸ்தான் அன்ட் கோ நிறுவத்தின் உரிமையாளர் பிரோஸ்தீன் கூறுகையில்,

கோவை மாவட்டம் ஸ்மார்ட் சிட்டி அறிவித்த நிலையில், சுற்றுச்சூழலிலும் ஸ்மார்ட் ஆக இருக்க வேண்டும் எனவே, அதிகமாக மரக்கன்றுகளை நடவு செய்து பேணி பாதுகாக்க வேண்டும். இந்துஸ்தான் அண்ட் கோ நிறுவனம் பல்வேறு சேவைகளை நிப்பான் பெயிண்டுடன் இணைந்து செய்து வருகிறது.

தற்போது ரோட்டரி கிளப்புகளுடன் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சியில் முதல் கட்டமாக 500 மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி உள்ளோம் மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு லட்சம் மரக்கன்றுகளை பொது மக்களுக்கு இலவசமாக வழங்கியும் அதனை பாதுகாக்க முயற்சி ஈடுபடுவோம் என்றார்.

மேலும் படிக்க