• Download mobile app
17 Mar 2026, TuesdayEdition - 3688
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தி எதிர்ப்பு போராட்டம் மூலம் அரசியலுக்கு வந்த கமல் இந்தி படத்தில் ஏன் நடித்தார்

July 20, 2017 தண்டோரா குழு

இந்தி எதிர்ப்பு போராட்டம் மூலம் அரசியலுக்கு வந்தகமல் இந்தி படத்தில் ஏன் நடித்தார்என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

விருதுநகரில் நடந்த மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர்,

பிரதமர் மோடி வரும் 27 ல் ராமேஸ்வரம் வர உள்ளார். இதற்காக நாளை ராமேஸ்வரத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்ஆய்வு செய்ய உள்ளார். ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத் கோவிந்த் தான் வெற்றி பெறுவார். எம்.எல்.ஏ.,க்கள் தங்களது தொகுதிகளில் பணி செய்த பின்னர் சம்பள உயர்வு அளித்திருக்கலாம் என்றார்.

மேலும்,கமல் அரசியலுக்கு வருவது அவரது விருப்பம். அவர் வந்துதான் தமிழக அரசியலை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை இல்லை. இந்தி எதிர்ப்பு போராட்டம் மூலம் அரசியலுக்கு வந்ததாக சொல்லும் கமல் ஏன் இந்தி படத்தில் ஏன் நடித்தார் என கேள்வி எழுப்பினார்.

மேலும் படிக்க