• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தி எதிர்ப்பு போராட்டம் மூலம் அரசியலுக்கு வந்த கமல் இந்தி படத்தில் ஏன் நடித்தார்

July 20, 2017 தண்டோரா குழு

இந்தி எதிர்ப்பு போராட்டம் மூலம் அரசியலுக்கு வந்தகமல் இந்தி படத்தில் ஏன் நடித்தார்என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

விருதுநகரில் நடந்த மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர்,

பிரதமர் மோடி வரும் 27 ல் ராமேஸ்வரம் வர உள்ளார். இதற்காக நாளை ராமேஸ்வரத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்ஆய்வு செய்ய உள்ளார். ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத் கோவிந்த் தான் வெற்றி பெறுவார். எம்.எல்.ஏ.,க்கள் தங்களது தொகுதிகளில் பணி செய்த பின்னர் சம்பள உயர்வு அளித்திருக்கலாம் என்றார்.

மேலும்,கமல் அரசியலுக்கு வருவது அவரது விருப்பம். அவர் வந்துதான் தமிழக அரசியலை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை இல்லை. இந்தி எதிர்ப்பு போராட்டம் மூலம் அரசியலுக்கு வந்ததாக சொல்லும் கமல் ஏன் இந்தி படத்தில் ஏன் நடித்தார் என கேள்வி எழுப்பினார்.

மேலும் படிக்க