June 17, 2020
தண்டோரா குழு
இந்திய – சீன எல்லையில் உள்ள லடாக் மற்றும் கல்வான் பகுதியில் இருநாட்டு ராணுவத்தினரிடையே நேற்று நடைபெற்ற மோதலில் இந்தியாவை சார்ந்த 20 இராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதையடுத்து பலரும் சீனாவிற்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியா-சீனா எல்லையில் ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்து விவாதிக்கவும், எல்லை பகுதிகளின் நிலைமை குறித்து விவாதிக்க ஜூன் 19 ம் தேதி மாலை 5 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டம் காணொலி கட்சி மூலம் நடைபெறும் என்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.