• Download mobile app
21 Jul 2026, TuesdayEdition - 3814
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியாவுக்கு, இந்தியாவில் இருந்து பிறந்து நாள் வாழ்த்துகள் – நரேந்திர மோடி

April 24, 2017 தண்டோரா குழு

தென் ஆப்ரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்சின் மகளின் 2வது பிறந்த நாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2௦15ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஜான்டி ரோட்சின் மகள் பிறந்தாள். இந்திய நாட்டின் கலாச்சாரம், பண்பாடு, மற்றும் பராம்பரியம் ஆகியவற்றில் சிறப்பாக இருப்பதாலும், இந்திய நாட்டின் மீது தான் கொண்டுள்ள மரியாதை மற்றும் அன்பால் தனது மகளுக்கு ‘இந்தியா’ என்று பெயர் வைத்ததாக ஜான்டி ரோட்ஸ் தெரிவித்தார்.

இந்தியா, இரண்டாவது பிறந்த நாளைக் கொண்டாடுவதாக தனது டிவிட்டர் பக்கத்தில் ஜான்ட்டி ரோட்ஸ் தெரிவித்திருந்தார். அதற்கு பதில் டிவிட் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, ரோட்சின் மகள் இந்தியாவுக்கு, இந்தியாவில் இருந்து பிறந்து நாள் வாழ்த்துகள் என்று பதில் டிவிட் செய்துள்ளார்.

மேலும் படிக்க