• Download mobile app
20 Jun 2026, SaturdayEdition - 3783
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இணையதள சேவை, பால், தண்ணீர் இல்லாமல் தவிக்கும் தூத்துக்குடி மக்கள்

May 25, 2018 தண்டோரா குழு

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் போராட்டத்தினால் நான்காவது நாளாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் பால்,காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவச பொருட்கள் கிடைக்காமல் பேருந்து வசதிகளும் இல்லாமலும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் நடத்தி வந்த போராட்டம் கடந்து மூன்று நாட்களாக உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.போலீசின் துப்பாக்கிச் சூட்டிற்கு இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர் மேலும் தொடரும் கலவரத்தால் காவல்துறையினருக்கு பயந்து பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கிக்கிடக்கின்றனர்.

துத்துக்குடியில் உள்ள பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக கடைகள் மூடிக்கிடப்பதால் பால், தண்ணீர்,காய்கறிகள் போன்ற அத்தியாவசப் பொருட்கள் கூட வாங்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.மேலும் தூத்துக்குடியில் மின்சாரம் மற்றும் இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க