• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இணைந்த இரு துருவங்கள்-வட கொரிய – தென் கொரிய அதிபர்கள் சந்திப்பு !

April 27, 2018 தண்டோரா குழு

கொரிய தீபகற்பத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட கொரியா, தென் கொரியா தலைவர்கள் இடையிலான உச்சி மாநாடு இன்று தொடங்கியது.

கொரியப்போர் 1953-ம் ஆண்டு முடிந்த பின்னரும் வட கொரியா, தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக பனிப்போர் நீடித்து வந்தது. வடகொரியா நடத்தி வந்த தொடர் அணு ஆயுத சோதனையானது, கடந்த இரு ஆண்டுகளாக மோதல் போக்கை அதிகரிக்கச் செய்தது. இந்நிலையில், சமீபத்தில் தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றதைத் தொடர்ந்து அந்த நாடுகள் இடையே ஒரு இணக்கமான சூழல் உருவாகி உள்ளது.
அணு ஆயுத சோதனைகளால் தென்கொரியாவை மிரட்டி வந்த வடகொரியா இறங்கி வந்தது. தென்கொரியாவுடன் இணக்கமான போக்கை கடைப்பிடிக்கவும் முன்வந்ததுடன், அணு ஆயுத திட்டங்களை கைவிடுவதாக சமீபத்தில் அறிவித்தது. இரு நாடுகளின் உயர்மட்ட தூதுக்குழுவினர் சந்தித்து பேசினர். அதைத் தொடர்ந்து இரு நாடுகள் இடையேயான பகை விலகத்தொடங்கியது.

இதையடுத்து,வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன்னும், தென் கொரியாவின் அதிபர் மூன் ஜே இன்னும் உச்சி மாநாட்டில் சந்தித்துப் பேச முடிவானது. இதற்காக வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் தென்கொரியா சென்றார். அவருடன் 9 பேர் அடங்கிய உயர்மட்டக் குழுவினரும் அங்கு சென்றனர்.
இந்நிலையில் திட்டமிட்டபடி இரு தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு இன்று தொடங்கியது. இரு நாடுகளின் எல்லையையொட்டி தென்கொரிய பகுதியில் உள்ள பன்முஞ்சோமில் நடைபெற்ற இந்த மாநாட்டின் துவக்கத்தில், இரு நாட்டு தலைவர்களும் ஒருவரையொருவர் கைகுலுக்கி பரஸ்பரம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். இது இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவின் புதிய தொடக்கமாக அமைந்தது.

இந்த மாநாட்டில் எடுக்கப்படும் தீர்மானம், இரு நாடுகள் இடையேயான கொரியப்போரை முறைப்படி முடிவுக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.கொரிய போர் முடிந்த பின்னர் வடகொரிய தலைவர் ஒருவர், தென்கொரியாவுக்கு சென்றது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடததக்கது.
தென்கொரியாவும், வடகொரியாவும் ஏப்ரல் மாதம் உச்சி மாநாடு நடத்த உள்ளன. 10 ஆண்டுகளுக்கு பின்னர் முதல்முறையாக இந்த உச்சி மாநாடு நடைபெறுகிறது’ என கூறப்பட்டுள்ளது.உச்சி மாநாட்டின் முதல் அமர்வு முடிந்த உடன் அடுத்த அமர்வு நடைபெறும். அதைத் தொடர்ந்து இரு தலைவர்களும் உடன்பாடு ஒன்றில் கையெழுத்திடுவார்கள். கூட்டாக அறிக்கையும் வெளியிடுவார்கள்.

மேலும் படிக்க