• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘இட்லி பாட்டி’ கமலாத்தாளுக்கு ‘Women Power 2023′ விருது வழங்கி கெளரவிப்பு!

March 9, 2023 தண்டோரா குழு

சர்வதேச மகளிர் முன்னிட்டு கோவையில் தனியார் அமைப்பு சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கோவை இட்லி பாட்டி கமலாத்தாள் உள்ளிட்ட 18 பெண்களுக்கு சிறந்த சாதனை பெண் எனும் விருது வழங்கப்பட்டது.

கோவை அவினாசி சாலையில் உள்ள ரெசிடென்சி ஹோட்டலில் சர்வதேச மகளிர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. ‘கோயமுத்தூர் உமன் பவர் 2023’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கல்வி,மருத்துவம்,சமூக சேவை,மகளிர் மேம்பாடு,அழகு கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட சுமார் 18 பெண்களுக்கு விருதுகள் சழங்கி கௌரவிக்கப்பட்டது.

குறிப்பாக கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கோவையில் ஒரு ரூபாய்க்கு இட்லி விநியோகித்து வரும் இட்லி பாட்டி கமலாத்தாள் உட்பட பலருக்கும் இந்த சாதனை பெண் விருதுகள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான தனியார் நிறுவன தலைவர் ஸ்மிதா பட்டேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரபல நிறுவனமான மார்ட்டின் குழும இயக்குநர் லீமா ரோஸ் டிறப்பு அழைப்பாளராக பங்கேற்று விருதுகளை வழங்கினார்.

முன்னதாக செய்தியாளர்களிடையே பேசிய லீமா ரோஸ்,

பெண்கள் எப்போதும் உயர்வானவர்கள் என்றும் அனைத்து துறைகளிலும் பெண்கள் சோதனைகளை சாதனைகளாக்கி ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் பணிபுரிந்து முதல் நிலையில் உள்ளனர் என்றும் தெரிவித்தார். மேலும் சிறார்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களை களைய அனைத்து பள்ளிகளிலும் சிறப்பு குழுக்கள் அமைக்க வேண்டும் எனவும் திருநங்கைகள் வாழ்க்கை தர மேம்பாட்டிற்காக அரசு மேலும் பல திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மேலும் படிக்க