• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆறுக்குட்டி எங்கள் அணிக்கு தானாக வந்து தானாகவே விலகியுள்ளார்– ஓபிஎஸ்

July 22, 2017 தண்டோரா குழு

ஆறுக்குட்டி எங்கள் அணிக்கு தானாக வந்து தானாகவே விலகியுள்ளார் என முன்னாள் முதல்வர் ஒ பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்த போது ஓபிஎஸ் அணிக்கு முதல் ஆளாக ஆதரவு அளித்தவர் கோவை கவுண்டம்பாளையம் எம்எல்ஏ ஆறுகுட்டி. இந்நிலையில், அவர் நேற்று பன்னீர்செல்வம் அணி தம்மை புறக்கணிப்பதாகவும் என்னை புறக்கணிப்பவர்களை, நான் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை எனக்கூறினார்.

இதற்கிடையில் இன்று மதுரை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களிடம் ஓ.பி.எஸ், ஆறுக்குட்டி எங்கள் அணிக்கு தானாக வந்தார், தானாகவே விலகியுள்ளார். அவருக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டது. அழைப்பு கொடுக்கப்பட்டது என அவர் கூறினார்.

மேலும் படிக்க