• Download mobile app
16 Apr 2026, ThursdayEdition - 3718
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் ஜெ. தீபாவுக்கு படகு சின்னம் ஒதுக்கீடு..!

March 27, 2017 தண்டோரா குழு

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் தீபாவிற்கு படகு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்ததையடுத்து ஆர்.கே நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12ம் தேதி இடைதேர்தல் நடைபெறவுள்ளது. இதில், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில்ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா போட்டியிடுகிறார்.

இந்நிலையில், இன்று இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுபவர்களுக்கு தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கியது.

முன்னதாக தீபா தனக்கு பேனா, திராட்சை கொத்து, படகு ஆகிய சின்னங்களில் ஒன்றை ஒதுக்கும்படி கோரிக்கை வைத்தார். இதையடுத்து, தீபாவுக்கு தேர்தல் ஆணையம் படகு சின்னம் ஒதுக்கியது.

சின்னம் ஒதுக்கப்பட்டதையடுத்து தீபா விரைவில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க