February 16, 2019
தண்டோரா குழு
கோவையில் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டு இருந்த 3 பேனர்களை சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கிழித்து எறிந்தார்.
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் விதிமுறைகளை மீறி பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. அங்கு வந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, 3 பேனர்களை கிழித்து ஏறிந்தார். நாளை கோவையில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளை ஒட்டி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி படம் போட்டிருந்த பேனரை கிழிக்க முயன்றார். அவரை தடுத்து நிறுத்திய காவல் துறையினர், பேனரை அகற்றி விடுவதாக உறுதியளித்தனர். ஆனால் உடனடியாக பேனரை அகற்ற கோரி பேனர் முன்பு தரையில் படுத்து போராட்டம் நடத்தினர். பேனரை அகற்றும் வரை அவ்விடத்தில் இருந்து செல்ல போவதில்லை எனவும், இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் டிராபிக் ராமசாமி தெரிவித்தார்.
காவல் துறையினருடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், தொடர்ந்து பேனர் முன்பாக அமர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்.