• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆர்.எஸ்.புரத்தில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

December 24, 2020 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட ஆர்.எஸ்புரம் வெங்கடசாமி சாலை, பொன்னுரங்கம் சாலை, பெரியசாமி சாலை, புன்னியகோடி சாலை ஆகிய பகுதிகளில் 24 மணி நேர குடிநீர் வழங்கும் திட்டப்பணிகளுக்கு குடிநீர் குழாய்கள் இணைப்பு மற்றும் மீட்டர் இணைப்பு பொருத்தப்பட்டு வரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, குடிநீர் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அலுவலர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டார்.இந்த ஆய்வின்போது மாநகர பொறியாளர் லட்சுமணன், செயற்பொறியாளர் (ஸ்மார் சிட்டி) சரவணக்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க