• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆர்.எஸ்.புரத்தில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கொரோனா கட்டுப்பாட்டு அறை

January 6, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி சார்பில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அறை ஆர்.எஸ்.புரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சுழற்சி முறையில் 20-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் டாக்டர்கள் குழு தலைமையில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த முறை பலருக்கு ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் தேவைப்பட்டது. எனவே பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் எந்தெந்த மையங்களில் ஆக்சிஜன் படுக்கை வசதிகள், சாதாரண படுக்கை வசதிகள், ஆம்புலன்ஸ் சேவை தேவைபடுபவர்களுக்கு உடனுக்கு உடன் உதவிடும் வகையில் இந்த மையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

மேலும் காய்ச்சல் முகாம் நடைபெறும் இடங்கள், கொரோனா பரிசோதனை முடிவுகள், அருகில் இருக்கும் சிகிச்சை மையம், கொரோனா தடுப்பூசி மையம் உள்ளிட்ட தகவல்களை இந்த கட்டுப்பாட்டு மையத்திற்கு போன் செய்து பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம்.கொரோனா சிகிச்சை மையங்களை கண்காணிக்க இங்கு சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதனை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில் இருந்து பார்வையிட முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க