• Download mobile app
10 Apr 2026, FridayEdition - 3712
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆயுதப்படை காவலர்களுக்கான வருடாந்திர கவாத்து மற்றும் மாவட்ட ஆயுத படையை ஆய்வு மேற்கொண்ட மேற்கு மண்டல காவல்துறை தலைவர்

November 24, 2024 தண்டோரா குழு

மேற்கு மண்டல காவல்துறை தலைவர் செந்தில்குமார்,கோவை மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கான கவாத்து, அரசால் வழங்கப்பட்டுள்ள அரசு வாகனங்கள் மற்றும் உடைபொருள்களுக்கான ஆய்வினை இன்று மேற்கொண்டார்.

இதில் பெண் மற்றும் ஆண் காவலர்கள் அலங்கார அணிவகுப்பில் பங்கேற்று தங்களது உடல் வலிமையையும் மன உறுதியையும் வெளிப்படுத்தினர். அதனை தொடர்ந்து சட்ட விரோத கூட்டத்தை கலைக்கும் கவாத்து(Mob operation) உட்பட பல்வேறு கவாத்துகளும் நடைபெற்றது. மேலும், இவ்வாய்வின் போது கவாத்து, உடைப்பொருள்கள் மற்றும் அரசு வாகனங்களை சிறந்த முறையில் பராமரித்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.

மேலும் ஆயுதப்படை காவலர்களுக்கு சட்ட ஒழுங்கு மற்றும் கைதி வழிக்காவல், முக்கிய பிரமுகர் வருகை போன்ற இதர பணிகள் குறித்து அறிவுரைகள் வழங்கினார். காவலர்களுக்கான குறைகளையும் கேட்டறிந்தார். இவ்வாய்வில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன் உடனிருந்தார்.

மேலும் படிக்க