• Download mobile app
17 Jun 2025, TuesdayEdition - 3415
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆம் ஆத்மி பெண் எம்.எல்.ஏ. அல்கா லம்பா ராஜினாமா!

December 22, 2018 தண்டோரா குழு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு எதிரான தீர்மானத்தில் கையெழுத்திட மறுத்த ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவரான எம்.எல்.ஏ. அல்கா லம்பா அவரது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.

சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் அண்மையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சஜன் குமாருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சஜன் குமார் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. இதனால் கலவரத்தை கருத்தில் கொண்டு முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா பட்டத்தை திரும்ப பெறவேண்டும் என்று டெல்லி சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவரான எம்.எல்.ஏ அல்கா லம்பா ஆதரவு தெரிவிக்கவில்லை. எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி கட்சி அவரை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. தான் ராஜினாமா செய்ய தயார் என்றும் அல்கா கூறியுள்ளார்.

மேலும், ராஜீவ் காந்தி நாட்டிற்காக தியாகம் செய்தவர் என்பதால் அவருக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்ப பெறுவதில் தனக்கு உடன்பாடு இல்லை என்று லம்பா தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய பெண் தலைவர்களில் ஒருவரான அல்கா லம்பா தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய உள்ளது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க