• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆபிரகாம் லிங்கனின் நினைவு மண்டபத்தை சேதப்படுத்திய சமூக விரோதிகள்

August 16, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவின் முன்னாள் குடியரசுத் தலைவரான ஆபிரகாம் லிங்கனின் நினைவு மண்டபத்தில் சமூக விரோதிகள் சிலர் தகாத வார்த்தைகளை சுவற்றில் எழுதி வைத்துள்ளனர். இதனை அதிகாரிகள் கண்டுபிடித்து நீக்கினர்.

அமெரிக்காவின் 16-வது குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கனின் நினைவு மண்டபம், வாஷிங்டின் டி.சியில் உள்ளது. அதன் அருகில் ஸ்மித்சோனியன் நிறுவனம் இருக்கிறது. அந்த இரண்டு இடங்களிலும் சுவற்றில் தகாத வார்த்தைகள் எழுதப்பட்டிருப்பதை அதிகாரிகள் கவனித்தனர்.
அந்த வார்த்தைகளை நீக்கி விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வாஷிங்டின் டி.சிக்கு வரும் சுற்றுலா பயணிகள் முக்கியமாக பார்க்கும் இடம், குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லின்கனின் நினைவு மண்டபம் ஆகும். அந்த நினைவு மண்டபம் இரண்டாவது முறையாக சேதப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க