• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

“ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்” – முக. ஸ்டாலின்

January 6, 2022 தண்டோரா குழு

“ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்” என முதலமைச்சர் முக.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

“ஆன்லைன் சூதாட்டத்தால் குடும்பமே தற்கொலை செய்துகொள்கிறது; இதனை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என
அதிமுக எம்.எல்.ஏ வைத்திலிங்கம் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் முக.ஸ்டாலின்

ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே தமிழ்நாடு அரசு சார்பில் முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்படும் என உறுதியளித்தார்.

மேலும் படிக்க