• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் அடுத்த அதிரடி அறிவிப்பு !

June 15, 2019 தண்டோரா குழு

தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் ஏழை தாய்களுக்கு 15,000 ரூபாய் வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது.அம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 171 சட்டமன்ற தொகுதிகளில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சுமார் 151 தொகுதிகளை கைப்பற்றி ஆந்திர மாநிலத்தின் முதல்வராக முதன் முறையாக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றுக்கொண்டார்.

முதல்வராக பதவி ஏற்றது முதல் ஜெகன் மோகன் ரெட்டி பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில்,தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் ஏழை தாய்களுக்கு 15,000 ரூபாய் வழங்கப்படும் என்று ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். மேலும் 2 ஆண்டுக்குள் ஆந்திராவில் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி அறிமுகம் செய்யப்படும் என்றும், அதே சமயம் தெலுங்கு கட்டாயப் பாடமாக கற்பிக்கப்படும் என்றும் ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார்.

மேலும் படிக்க