• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆதார் கார்டு கேட்காமல் மது குடுக்க சொல்லுங்க – கோவை மதுப்பிரியர்கள் வேண்டுகோள்

May 7, 2020 தண்டோரா குழு

ஆதார் கார்டு இல்லாமல் மது வழங்கக்கோரி மது பிரியர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கொரனோ தொற்று பரவாமல் இருப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் 144 தடை உத்தரவு போட்டிருந்தது. இதனால் டாஸ்மாக் கடைக்கு மூடப்பட்டிருந்தது. இதற்கிடையில் தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள 95 டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்பட்டன. அதிகாலை ஆறு மணிக்கே பூமார்க்கெட் அர்ச்சனா திரையரங்கம் அருகே காத்திருந்த மது பிரியர்கள் டோக்கனை வாங்கினர்.இந்நிலையில் காவல் துறையினர் வரைந்திருந்த கட்டிடத்திற்குள் நின்றவர்கள் , அதிலேயே உட்கார்ந்து இருந்தனர். ஒரு சில கட்டங்களில் செருப்பு, கல், தங்களது பை ஆகியவற்றை வைத்திருந்தனர். 44 நாட்கள் கழித்து மதுபான கடை திறக்கப்பட்டதாகவும், அரசு ஆதார் கார்டை கேட்காமல் கொடுக்க வேண்டும் எனவும் அவர்கள்தெரிவித்தனர். ஆதார் கார்டு இல்லாமல் மது கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மது பிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் கோவை கிட்டாம்பாளையம் பகுதியிலுள்ள மதுபான கடையில் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் மக்கள் வரிசையில் நின்று மது வாங்கிசெல்கின்றனர். பெரும்பாலான மதுபான கடைகளில் அனைத்து வயதினரும் வாங்கிச்சென்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க