• Download mobile app
17 Apr 2026, FridayEdition - 3719
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆகஸ்ட் 5ல் துணை குடியரசுத் துணைதலைவர் தேர்தல்

June 29, 2017 தண்டோரா குழு

குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் வருகிற ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தெரிவித்துள்ளார்.

துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் பதவிக்காலம், வரும் ஆகஸ்ட் 10ம் தேதியோடு முடிவடைகிறது. இதனையடுத்து துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறும் தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

இது குறித்து டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி கூறுகையில்,

லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்கள் குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்வார்கள். ராஜ்யசபா செயலர், தேர்தல் நடத்தும் அதிகாரியாக செயல்படுவார்.

மேலும் குடியரசு துணைத்தலைவருக்கான தேர்தல் ஆகஸ்ட் 5-ல் நடைபெறும். இந்த பதவிக்கான வேட்பு மனுக்களை வருகிற ஜூலை 4ஆம் தேதி முதல் ஜூலை 18ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம். தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஜூலை 19ஆம் தேதி நடைபெறுகிறது. ஜூலை 21ஆம் தேதி வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க