May 5, 2020
ஆகஸ்ட் 1 -ஆம் தேதி முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என மத்திய அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தீவிரமடைந்து வரும் நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் புதிதாக சேரும் மாணவர்களுக்கு முதலாம் ஆண்டு வகுப்புகள் செப்டம்பர் 1-ம் தேதி துவங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.