• Download mobile app
07 Feb 2026, SaturdayEdition - 3650
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வாடிவாசல் கல்வெட்டில் முதல்வர் பெயர் வைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

January 7, 2019 தண்டோரா குழு

மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசலில் முதல்வர் பெயரில் கல்வெட்டு வைப்பதாக எம்எல்ஏ அறிவித்ததற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் பரபரப்பு நிலவியது.

ஆண்டு தோறும் ஜனவரி 17-ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலக புகழ்பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இந்த ஆண்டிற்கான
ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெறும் நிலையில்அதனை பார்வையிட வந்த சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் வாடிவாசல் அருகே காளை வெளியே வரும் பகுதியில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் பெயரை கல்வெட்டில் பொறிக்க பேரூராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதை கேட்டு அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினர் அதிரச்சியடைந்தனர்.

பின்னர் பொது மக்கள் சட்டமன்ற உறிப்பினரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு காவல்துறையினரை வரவழைத்து சமரசம் செய்ய முயற்சித்தனர். எனினும் ஊர் பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் திடீரென கோபமாக காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

மேலும் படிக்க