• Download mobile app
09 Jun 2025, MondayEdition - 3407
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைப்பு – திராவிடர் கழகத்தினர் சாலை மறியல்

April 8, 2019 தண்டோரா குழு

அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகில் உள்ள பெரியாரின் சிலை மர்மநபர்களால் உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுக்கோட்டைமாவட்டம் அறந்தாங்கியில் உள்ள அரசு மருத்துவமனை அருகே பெரியார் சிலை உள்ளது. 1998-ல் வைக்கப்பட்ட இந்த சிலையின் தலைப்பகுதியை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.இன்று அதிகாலையில் சிலையைக் கடந்து சென்ற மக்கள் பலர் சிலையின் தலை உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.தகவல்அறிந்து வந்த போலீசார் சிலையை உடைத்த மர்ம நபர்கள் யார் என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையில்,பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட பகுதியில் திராவிடர் கழகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்யும் வரை போராட்டம் நடத்துவோம் என முழக்கம் இட்டனர். பரபரப்பான தேர்தல் நேரத்தில் பெரியார் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிலை அமைந்துள்ள இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க