• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அருணாச்சல விமான விபத்தில் உயிரழந்த விமானபடை வீரருக்கு விமான படை அதிகாரிகள் அஞ்சலி

June 21, 2019 தண்டோரா குழு

அருணாச்சல விமான விபத்தில் உயிரழந்த விமானபடை வீரர் வினோத்தின் உடலுக்கு கோவை சூலூர் விமான படைத்தளத்தில் விமான படை அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து கடந்த ஜூன் 3 ம் தேதி கிளம்பிய ஏ.என். 32 ரக விமானம் 13 விமானபடை வீரர்களுடன் அருணாச்சல பிரதேச வனப்பகுதியில் விபத்திற்குள்ளானது. இந்நிலையில் நீண்ட தேடுதல் பணிக்கு பின்னர் 13 பேரின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டு அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பபட்டது.விமான விபத்தில் உயிரிழத்த கோவையை சேர்ந்த வினோத் உடல் சூலூர் விமான படைத்தளத்திற்கு இன்று காலை கொண்டு வரப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.சிங்காநல்லூரில் உள்ள வினோத்தின் இல்லத்திற்கு உடல் கொண்டு சென்று இறுதிசடங்குகள் செய்த பின்னர் 12 மணி அளவில் தகனம் செய்யப்பட இருக்கின்றது.

மேலும் படிக்க