June 21, 2019
தண்டோரா குழு
அருணாச்சல விமான விபத்தில் உயிரழந்த விமானபடை வீரர் வினோத்தின் உடலுக்கு கோவை சூலூர் விமான படைத்தளத்தில் விமான படை அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.
அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து கடந்த ஜூன் 3 ம் தேதி கிளம்பிய ஏ.என். 32 ரக விமானம் 13 விமானபடை வீரர்களுடன் அருணாச்சல பிரதேச வனப்பகுதியில் விபத்திற்குள்ளானது. இந்நிலையில் நீண்ட தேடுதல் பணிக்கு பின்னர் 13 பேரின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டு அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பபட்டது.விமான விபத்தில் உயிரிழத்த கோவையை சேர்ந்த வினோத் உடல் சூலூர் விமான படைத்தளத்திற்கு இன்று காலை கொண்டு வரப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.சிங்காநல்லூரில் உள்ள வினோத்தின் இல்லத்திற்கு உடல் கொண்டு சென்று இறுதிசடங்குகள் செய்த பின்னர் 12 மணி அளவில் தகனம் செய்யப்பட இருக்கின்றது.