• Download mobile app
21 May 2025, WednesdayEdition - 3388
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அரிவாள் வெட்டில் உயிரிழந்த சோடா கடை உரிமையாளர் இறுதி ஊர்வலம்

September 14, 2020 தண்டோரா குழு

கோவை காந்திபுரத்தில் நேற்று வெட்டி படுகொலை செய்யப்பட்ட சோடா கடை உரிமையாளர் இறுதி ஊர்வலம் இன்று நடைபெற்றது.

காந்திபுரம் ராம் நகர் பகுதியில் சோடா கடை உரிமையாளர் பிஜு என்பவர் ஏழு பேர் கொண்ட கும்பலால் நேற்று வெட்டப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவரின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து ஒப்படைக்கப்பட்டது.அவரது உடலை காண கோவை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை வார்டிற்கு முன் 200க்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர்.

இதனால் அவரது உடலானது அங்கேயே பார்வைக்காக வைக்கப்பட்டு கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள மையானத்திற்கு எடுத்து செல்ல முடிவெடுக்கபட்ட நிலையில் பிஜு வின் இறுதி ஊர்வலத்தில் 100 க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இதனால் கோவை அரசு மருத்துவமனையில் இருந்து பாப்பநாயக்கன்பாளையம் வரை 200க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் அணிவகுத்து செல்ல முடிவெடுக்கப்பட்டது.

இந்நிலையில் கோவை நீதிமன்ற வளாகம் முன்பு ஊர்வலத்தில் கலந்து கொள்ள வந்த வாகனங்களை காவல்துறையினர் நிறுத்தி வைத்ததால் அவர்கள் காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க