• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 2020 21 ஆம் ஆண்டுக்கான மாணவியர் சேர்க்கை துவக்கம்

October 9, 2020 தண்டோரா குழு

கோவை புலியகுளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 2020 21 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவியர் சேர்க்கையை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்‌.பி வேலுமணி தொடங்கி வைத்தார்.

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் புதிதாக 7 அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி தெரிவித்திருந்தார். அதன்படி அரியலூர், கரூர், விழுப்புரம், விருதுநகர், நாகப்பட்டினம், ராணிப்பேட்டை மற்றும் கோவை என ஏழு இடங்களில் புதிதாக அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளது‌. இதில் கோவை புலியகுளம் பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கபட்டுள்ளது.

இந்த நிலையில் இக்கல்லூரியின் 2020 – 2021 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவியர் சேர்க்கை துவக்க விழா இன்று நடைபெற்றது.இதில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்‌.பி வேலுமணி கலந்து கொண்டு மாணவியருக்கு விண்ணப்பப் படிவங்களை வழங்கி சேர்க்கையை தொடங்கி வைத்தார்.

விழா மேடையில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேசுகையில்,

கோவை மாவட்டத்தில் பல்வேறு சாதனைகளை தமிழக அரசு செய்து வருகிறது.விமானநிலைய விரிவாக்கம், மெட்ரோ ரயில் , பல்வேறு இடங்களில் மேம்பாலங்கள், 5 அரசு கல்லூரிகள், அத்திக்கடவு அவினாசி திட்டம்,பில்லூர் மூன்றாம் கூட்டுக் குடிநீர் திட்டம் என பல்வேறு திட்டங்களை கோவை மாவட்டத்தில் இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் நிறைவடையும் போது ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும். புலியகுளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்கட்டமாக 5 பாடபிரிவுகள் துவங்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை எண்ணிக்கையைப் பொருத்து கூடுதல் பாடபிரிவுகள் வருங்காலங்களில் துவங்கப்படும்‌. தனியார் கல்லூரிகளில் 30 ஆயிரம் ரூபாய் அளவுக்கு கல்வி கட்டணம் செலுத்திப் படிக்க வேண்டிய பாடப்பிரிவுகளை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2000 ரூபாய் கட்டணத்தில் படிக்க இயலும். இவ்வாறு அமைச்சர் எஸ்‌.பி வேலுமணி தெரிவித்தார்.

மேலும் படிக்க