• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அரசு பள்ளி மாணவர்களின் ஆட்டோ பயணத்திற்கு மாதம் ரூ.20 வழங்கும் ஓய்வூதியர் !

June 2, 2018 தண்டோரா குழு

சிவகங்கையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவர் அரசு பள்ளி மாணவர்கள் பயணிப்பதற்கு மாதம் 20 ஆயிரம் ரூபாயை ஆட்டோ கட்டணமாக வழங்கி வரும் சம்பவம் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் கோவானூரில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் சித்தலூர் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.ஆனால்,கோவானூரில் இருந்து சித்தலூர் செல்லும் பாதை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.இதனால் கோவானுரைச் சேர்ந்த மாணவர்கள் பெரியக்கோட்டையில் உள்ள பள்ளியில் சேர்ந்து படித்து வந்தனர். அவர்களை சித்தலூர் பள்ளியில் சேர்க்க தலைமை ஆசிரியர் பீட்டர் முயற்சி எடுத்தார். ஆனால் வாகன வசதி ஏதும் இல்லாத காரணத்தால் குழந்தைகளை சித்தலூர் பள்ளிக்கு அனுப்புவதற்கு பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் சித்தலூர் பள்ளியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற முனியாண்டி என்பவர் 2 ஆட்டோக்களை ஏற்பாடு செய்து அதற்குரிய கட்டணம் 20 ஆயிரம் ரூபாயை மாதந்தோறும் தானே வழங்குவதாகவும் ஒப்புக் கொண்டார். இதனால் பெற்றோர்கள் 24 குழந்தைகளை சித்தலூர் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து முனியாண்டி கூறுகையில்,

எனது மகன் நல்ல நிலையில் உள்ளான். எங்களுக்கு தேவையான அனைத்தும் என் மகனே பார்த்து கொள்கிறான்.இதனால் எனது ஓய்வூதியத் தொகையை ஏழை மாணவர்கள் ஆட்டோவில் செல்ல செலவழிக்கிறேன்.

இதுமட்டுமன்றி, முனியாண்டி பள்ளிவசதிக்காக சமீபத்தில் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது.

மேலும் படிக்க