• Download mobile app
20 Jun 2026, SaturdayEdition - 3783
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரசுப்பள்ளியில் மயங்கி விழுந்த மாணவி – மருத்துவர் இல்லாததால் உயிரிழப்பு

June 7, 2018 தண்டோரா குழு

விருத்தாச்சலம் அருகே அரசு ஆரம்ப சுகதார நிலையத்தில் மருத்துவர் இல்லாத காரணத்தால் உரிய சிகிச்சை கிடைக்காமல் மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருத்தாசலம் அருகே கம்மாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவி மகாலட்சுமி(13).இன்று காலை வழக்கம் போல் பள்ளி சென்ற அவர்,பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்றார்.அப்போது திடீரென மயங்கி விழுந்தார்.

மயங்கிய அவரை ஆசிரியர்கள் கம்மாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். ஆனால்,அங்கு மருத்துவர்கள் இல்லாத நிலையில், 30 நிமிடங்கள் உயிருக்கு போராடிய மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.இதனால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் விருத்தாசலம் சேத்தியாத்தோப்பு சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க