February 25, 2019
தண்டோரா குழு
அமைதிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் புல்வாமா தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை இந்திய கொடுத்தல் நடவடிக்கை எடுப்போம் என இந்திய பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமீபத்தில் ராஜஸ்தானில் நடந்த தேர்தல் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி புல்வாமா தகுதல் குறித்து பாகிஸ்தானை கடுமையா விமர்சனம் செய்திருந்தார் ” காஷ்மீர் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தோடு இந்தியா மட்டுமல்லாமல், உலகமும் உள்ளது. நமது எல்லையில் காவல் இருக்கும் வீரர்க்ள் மீது நம்பிக்கை வையுங்கள். பவானி மாதா மீது நம்பிக்கை வையுங்கள். மோடி அரசின் மீதும் நம்பிக்கை வையுங்கள். இந்த முறை எல்லா கணக்கையும் உரிய நேரத்தில் தீர்த்து விடலாம்.
காஷ்மீருக்காகத்தான் போர் புரிகிறோம், காஷ்மீருக்கு எதிராக அல்ல. பயங்கரவாதம், மனிதநேய எதிரிகளுக்கு எதிராகத்தான் நாம் போராடி வருகிறோம். காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டும் பலத்துடன் நாம் முன்னேறி வருகிறோம். இன்று பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்ட மனநிலை உருவாகியுள்ளது”
என்றார்.
இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் ” பிரதமர் இம்ரான் கான் அளித்த வாக்குறுதியின்படி நடப்பார். புல்வாமா தாக்குதலில் உரிய, நம்பத்தகுந்த ஆதாரங்களை அளித்தால் உடனடியாக விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும். பிரதமர் மோடி அமைதிக்கு ஒரு வாய்ப்பளிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.