• Download mobile app
21 Jul 2026, TuesdayEdition - 3814
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் எனக்கும் சம்பந்தமில்லை – சுப்ரமணியம் கடிதம்

May 11, 2017 தண்டோரா குழு

சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பரும், அரசு ஒப்பந்ததாரருமான சுப்பிரமணியம் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய கடிதம் கிடைத்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் தமிழக சுகாதார அமைச்சர் விஜய பாஸ்கரின் வீடு,குவாரி, அலுவலகம் ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அதே நேரத்தில் அமைச்சரின் உறவினர்கள் மற்றும் அவரது நண்பரான சுப்ரமணியம் ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

இந்நிலையில் கடந்த மாதம் 8ம் தேதி அமைச்சர் விஜய பாஸ்கரின் நண்பரான சுப்ரமணியம் தோட்டத்தில் மர்மமான முறையில் இறந்துக் கிடந்தார். பிரேத பரிசோதனை முடிவில், அவர் தற்கொலை செய்து கொண்டு இறந்தது தெரியவந்தது.

இந்நிலையில் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக சுப்ரமணியம் எழுதிய கடிதத்தை அவரின் உறவினர்கள் இன்று வெளியிட்டனர்.அவர் எழுதிய கடிதத்தில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் தனக்கும் தொடர்பில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் பி.எஸ்.கே. தென்னரசு என்பவருக்கும் தனக்கும் ஏற்பட்ட தொழில் போட்டியால் என்னைப் பற்றி தவறான தகவல்களை பரப்பி வந்தார். அவர் கொடுத்த பொய்யான தகவல்களின் காரணமாக என் வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள் என்று அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளார்.

சுப்பிரமணியம் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக உயர் அதிகாரிகள் 13 பேருக்கு கடிதம் எழுதி உள்ளதும் தெரிய வந்துள்ளது.

மேலும் படிக்க