June 4, 2020
தண்டோரா குழு
தமிழகம் முழுவதும் உள்ளாட்சி துறையில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்று வருவதாகவும், பீளிச்சிங் பவுடர் வாங்கியதில் 200 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாகவும் கோவை சிங்காநல்லூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை வடகோவை பகுதியில் உள்ள திமுக அலுவலகத்தில் சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்,
உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பல்வேறு முறைகேடுகள் செய்து வருகிறார்.
தமிழகம் முழுவதும் உள்ளாட்சி துறையில் ஊழல் நடைபெற்று வருகிறது. பிளீச்சிங் பவுடர் வாங்கியதில் 200 கோடி ஊழல் நடைபெற்று உள்ளது. அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தூண்டுதலின் பேரில் திமுகவினர் மீது காவல் துறையினர் பொய் வழக்கில் கைது செய்கின்றனர். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சர்வதிகாரி போல செயல்பட்டு வருகிறார். திமுகவினர் மீது தொடர் வழக்குகளை போட்டு அச்சுறுத்தி வருகின்றனர்.தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் முறையாக உணவுகள் கூட வழங்கபடவில்லை. அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை கண்டித்தும் தமிழக அரசை கண்டித்தும் கோவையில் நாளை உள்ளாட்சி அமைப்புகள் முன்பு திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.