• Download mobile app
18 Jun 2025, WednesdayEdition - 3416
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

அமெரிக்காவில் 13 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யும் கூகுள் நிறுவனம்

February 14, 2019 தண்டோரா குழு

அமெரிக்காவில் நெவேடா, டெக்சாஸ், நெப்ராஸ்கா, ஓஹியோ, விர்ஜீனியா, தெற்கு கரோலினா உள்ளிட்ட இடங்களில் கூகுள் நிறுவனம் புதிய டேட்டா மையங்கள் மற்றும் அலுவலகங்களை கட்டமைக்க உள்ளது.

இதற்காக கூகுள் நிறுவனம் இந்த ஆண்டில் அமெரிக்காவில் 13 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்ய உள்ளது என கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த புதிய மையங்களை கட்டுவதன் மூலம் அமரிக்காவில் பல ஆயிரம் பேருக்கு வேலைகிடைக்க வாய்ப்பு என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு அமெரிக்காவில் தங்களது மையங்கள் விரிவாக்கத்திற்காக 9 பில்லியன் டாலர்களுக்கு மேல் செலவிட்டதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.தற்போது கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்காவில் 21 மாநிலங்களில் மையங்கள் உள்ளன. இந்த விரிவாக்கத்தின் மூலம் அமெரிக்காவில் 24 மாநிலங்களில் கூகுள் மையங்கள் ஏற்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க