• Download mobile app
15 Jun 2025, SundayEdition - 3413
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை முடிந்து நாடு திரும்பினார் அருண் ஜெட்லி

February 9, 2019 தண்டோரா குழு

அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சையை முடித்துக்கொண்டு மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி இன்று இந்தியா திரும்பியுள்ளார்.

சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, உயர் சிகிச்சைக்காக கடந்த ஜனவரி 15-ம் தேதி அமெரிக்கா சென்றார். இதனையடுத்து அவர் வகித்து வந்த நிதி அமைச்சக பொறுப்பு, தற்காலிகமாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலிடம் வழங்கப்பட்டது. அவரும் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

எனினும், சிகிச்சை முடிந்த பின், சில நாட்கள் அமெரிக்காவிலேயே ஓய்வெடுத்த ஜெட்லி, டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் அறிக்கை வெளியிட்டார்.இந்நிலையில், அருண் ஜெட்லி 3 வார சிகிச்சைக்கு பின் தற்போது இந்தியா திரும்பியுள்ளார். மேலும், தாயகம் திரும்பியது மகிழ்ச்சியாக உள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் படிக்க