• Download mobile app
03 Aug 2026, MondayEdition - 3827
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அனுமதியன்றி மரத்தை வெட்ட முயன்ற காருண்யா பல்கலைகழகம்– தடுத்து நிறுத்திய இயற்கை ஆர்வலர்கள்

September 12, 2018

கோவை காருண்யா பல்கலைகழகம் அனுமதியன்றி சிறுவாணி ரோடில் உள்ள மரங்களை வெட்ட முயற்சித்தனர் அங்கு வந்த இயற்கை ஆர்வலர்கள் சிலர் அதை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

கோவை சிறுவாணி ரோட்டில் காருண்யா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. பல்கலைகழகத்தை சேர்ந்த சிலர் கல்லூரியின் முன்பு உள்ள கேட்டின் அருகில் இருந்த மரத்தை எந்த ஒரு அனுமதியன்றி வெட்ட முயன்றனர். அப்போது அங்கு வந்த இயற்கை ஆர்வலர்கள் சிலர் அதனை தடுத்து நிறுத்தி அவர்களிடம் கேள்வி கேட்டனர்.

இது குறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில்,

பல்கலைகழகத்தினை சேர்ந்த சிலர் மரங்களை வெட்டி கொண்டு இருந்தனர்.அதுகுறித்து நாங்கள் கேட்டதற்கு கல்லூரியில் இருக்கும் கேமராவை இந்த மரம் மறைப்பதால் மரத்தை வெட்டுகிறோம் என்றனர்.இதையே தொடர்ந்து இவர்கள் செய்து வருகிறார்கள்.எந்த ஒரு அனுமதியன்றி இங்கு இருக்கும் மரத்தை வெட்டி கொண்டே போகின்றார்கள்.இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மரமும் ஒரு உயிர் தான் அதனை காக்க வேண்டியது நம் கடமை.இதுபோன்று அனுமதியன்றி மரத்தை வெட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க