• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அந்த வீடியோவை நீக்க வேண்டும் ! – விஜய் சேதுபதி ரசிகர்கள் கோவை கமிஷ்னரிடம் மனு

May 11, 2020 தண்டோரா குழு

நடிகர் விஜய் சேதுபதி பற்றி பேசிய கருத்துகளை அகற்றவும்,வலைதளத்தில் சிலர் பரப்பிய அந்த வீடியோவை நீக்க கோரி கோவை மாநகர காவல் ஆணையரிடம் அவரது ரசிகர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

நடிகர் விஜய் சேதுபதி ரசிகரான கோவை பொன்னையராஜபுரம் பகுதியில் வசிக்கும் கோகுல் என்பவர் விஜய் சேதுபதி ரசிகர்கள் நற்பணி இயக்கத்தினருடன் இணைந்து கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.அந்த புகாரில், நடிகர் விஜய்சேதுபதி கடந்த ஆண்டு தனியார் தொலைகாட்சியில் ’நம்ம ஊரு ஹீரோ’ என்ற நிகழ்ச்சியில் மறைந்த நடிகர் கிரேஸி மோகன் மேடையில் பேசிய நகைச்சுவை வசனம் ஒன்றை பேசியிருந்தார்.

இந்நிலையில் வசனத்தை முற்றிலுமாக மாற்றி இந்துக்களுக்கு எதிராக பேசியது போல் அந்த காணொளியை எடிட் செய்து சமூக வலைதளத்தில் சிலர் பரப்பி உள்ளனர்.
இதனால் சமூக வலைதளங்களில் இந்து ஆதரவாளர்கள் சிலர் விஜய் சேதுபதி மற்றும் அவரது குடும்பத்தினரை பற்றி அவதூறு பரப்பும் வகையில் பேசி வருகின்றனர். மேலும் இதன் மூலம் விஜய் சேதுபதியின் நற்பெயரை கெடுக்கும் விதத்திலும்,சமுதாய அமைதியை சீர்குலைக்கும் விதத்தில் உள்ளதாக கூறியுள்ளார்.நடிகர் விஜய் சேதுபதி இந்து மத மாண்புகளையும்,மத கோட்பாடுகளையும் எந்த வகையிலும் மீறாமல் நடந்து கொள்பவர் என்றும் எனவே உடனடியாக விஜய் சேதுபதி பற்றி பேசிய கருத்துகளை அகற்றவும், விஷமிகள் சிலர் பரப்பிய அந்த வீடியோவை நீக்க கோரி காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகார் மனுவை அளிக்கும் போது அவருடன் கோவை மாவட்ட விஜய் சேதுபதி நற்பணி இயக்கத்தின் மாவட்ட தலைவர் விக்னேஷ் அன்பழகன்,மற்றும் சட்ட ஆலோசகர் அருள் சக்தி உடனிருந்தனர்.

மேலும் படிக்க