• Download mobile app
16 Jul 2026, ThursdayEdition - 3809
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘அது நான் தான் ஆனால் குரல் என்னுடையது இல்லை’ – எம்.எல்.ஏ., சரவணன்

June 13, 2017 தண்டோரா குழு

“வீடியோவில் உள்ளது நான்தான் ஆனால் அதில் ஒலிக்கும் குரல் என்னுடையது அல்ல” என்று ஒ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., சரவணன் கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு ஆதரவு தர காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் தங்கியிருந்த எம்.எல்.ஏ.,க்களுக்கு பணம் தரப்பட்டதாக மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் பேசியதாக வீடியோ ஒன்று நேற்று தனியார் தொலைக்காட்சியில் வெளியானது. இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து எம்.எல்.ஏ. சரவணன் செய்தியாளர்களிடம் கூறுகையில்

“தனியார் தொலைக்காட்சியில் வெளியான வீடியோவில் உள்ளது நான்தான் ஆனால் அதில் ஒலிக்கும் குரல் என்னுடையது அல்ல. நான் முன்பு எப்போதோ அளித்த பேட்டியில் குரலை மட்டும் மாற்றி டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர். பேரம் பேசியதாக வெளியான அந்த வீடியோவில் உண்மை இல்லை.

கருணாஸ், தமீம் அன்சாரி, தனியரசு குறித்து நான் பேசவில்லை. இது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. நிச்சயமாக வழக்கு தொடர்வேன்” என்றார்.

மேலும் படிக்க