• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அதிமுக பெயரில் கட்சியும் இல்லை சின்னமும் இல்லை – தா.பாண்டியன்

August 7, 2017 தண்டோரா குழு

அதிமுக என்ற பெயரில் கட்சியும் இல்லை சின்னமும் இல்லை என கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.

கோவையில் நடைபெற உள்ள கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக கோவை வந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினருமான தா. பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர்,

தமிழக அரசியலில் திமுகவின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின்செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. தமிழக விவசாயிகளின் பிரச்சனையில், தமிழக மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வு விவகாரத்தில், அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜி.எஸ்.டி. வரி வித்திப்பால் சிறு,குறு,நடுத்தரத் தொழில்கள் கடுமையாக பாதித்துள்ளது. வரி சீர் திருத்தத்தை நாங்கள் ஏற்திர்க்கவில்லை. 2011ல் இந்த முறை விவாதத்திற்கு வந்தபோதே நாங்கள் ஆதரித்தோம். மேற்கு வங்காளம், திரிபுரா, கேரளம் ஆகிய மாநிலங்களில் ஆதரித்து தீர்மானங்கள் நிறைவேற்றினோம்.

அதிமுகவைப் பொறுத்தவரை அது தற்போது மூன்றாகவோ, நான்காகவோ உள்ளது. தமிழகத்தில் இப்போது தேர்ந்தேடுக்கப்பட்ட கட்சி ஆட்சியில்இல்லை. இருப்பவர்கள் தமிழக நலனுக்காக நிற்கவில்லை. அதிமுகவின் வெவ்வேறு அணிகளால் தான் தமிழகத்துக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. அதிமுக என்ற பெயரில் கட்சியும் இல்லை சின்னமும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க