• Download mobile app
14 Jun 2025, SaturdayEdition - 3412
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அதிமுக – பாமக கூட்டணி கேவலமான கூட்டணி – குஷ்பு விமர்சனம்!

February 26, 2019 தண்டோரா குழு

அதிமுக – பாமக கூட்டனி குறித்த கேள்விக்கு அது ஒரு கேவலமான கூட்டணி என்று அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பூ கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையில் ஒரு அணியும் அதிமுக தலைமையில் ஒரு அணியும் இப்போது உருவெடுத்துள்ளது. அதில் அ.தி.மு.க கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அ.தி.மு.க கூட்டணியில் பா.மகவுக்கு ஒரு மாநிலங்களவை தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 21 தொகுதிகளில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் பா.ம.க, அ.தி.முகவுக்கு ஆதரவு அளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிமுக – பாமக கூட்டனி குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பூ கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

அப்போது பேசிய அவர்,

அதிமுக – பாமக கூட்டணி கேவலமான கூட்டணி. காவிரி விவகாரம், நீட் தேர்வு போன்ற தமிழக பிரச்சனைகளுக்கு சரியான தீர்வை கொடுக்காத பாஜகவுடன், அதிமுக கூட்டணி சேர்ந்துள்ளது. பாஜக அரசுக்கு பூஜ்யத்துக்கு கீழ் மதிப்பெண் அளித்தவர் ராமதாஸ். ஆனால் அதை முற்றிலுமாக மறந்துவிட்டு பூஜ்யத்துடன் இணைந்து விட்டார். தமிழக மக்களின் எதிர்காலத்தை மோடியிடம் அடகுவைத்து விட்டு பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது ” என இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க