March 8, 2019 தண்டோரா குழு
அதிமுக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் இல்லை எனவும் கூட்டணியை முதல்வரும் துணை முதல்வரும் முடிவுசெய்வார்கள் எனவும் அமைச்சர் எஸ். பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை உக்கடம் பேருந்து நிலைய வளாகத்தில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை தமிழக அமைச்சர் எஸ் பி வேலுமணி திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,
அதிமுக தலைமையிலான கூட்டணி தொடர்பாக முதல்வரும் துணை முதல்வரும் முடிவெடுப்பார்கள். கூட்டணி பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் இல்லை. இன்று தொகுதிப் பங்கீடு நிறைவு பெறுமா என்ற கேள்விக்கு நிறைவு பெற்ற பிறகு கூறுவதாகவும் பதிலளித்தார்.