• Download mobile app
12 Jun 2025, ThursdayEdition - 3410
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அதிமுக கூட்டணியைப் பார்த்து மு.க.ஸ்டாலின் மிரண்டு போய் உள்ளார் – முதல்வர் பழனிசாமி

March 9, 2019 தண்டோரா குழு

அதிமுக கூட்டணியைப் பார்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிரண்டு போய் உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி,

அதிமுக கூட்டணியை உடைக்க எதிர்கட்சிகள் சதி செய்து வருகிறது. அதனால் கூட்டணி கட்சி தொண்டர்கள் கவனமாக இருக்க வேண்டும். பாலில் ஒரு துளி விஷம் பட்டால்கூட பால் கெட்டு விடும். அதனால் கூட்டணி கட்சி தொண்டர்கள் கவனமாக இருந்து முழு ஒத்துழைப்பு நல்கி, தேர்தலை சந்திக்க வேண்டும். அதிமுக கூட்டணியை பார்த்து என்னென்ன வார்த்தைகள் பேசக் கூடாதோ அத்தனை வார்த்தைகளையும் மு.க. ஸ்டாலின் பேசுகிறார். அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. நல்ல கூட்டணியை அமைத்து உள்ளோம். இந்த சந்தர்ப்பம் என்றைக்கும் கிடைக்காத சந்தர்ப்பம். ஏனென்றால், எதிர்பார்த்தபடி பல பேர் மத்தியில் நம் அணியைச் சேர்ந்தவர்கள் பொறுப்புக்கு வருவார்கள் பிரகாசமான வாய்ப்புள்ளது என்றார்.

மேலும், கட்சியும் மலரும் ; தமிழ் நாடும் வளரும். எனவே ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போல இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இன்னும் சில கட்சிகள் புதிதாக கூட்டணி சேர விரும்புகிறார்கள். இந்த கூட்டணி அடுத்த தேர்தலிலும் தொடரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க