• Download mobile app
08 Sep 2025, MondayEdition - 3498
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘அதிமுக அணிகள் இணையும்’ நம்பிக்கை தெரிவித்த முதல்வர்

July 28, 2017 தண்டோரா குழு

அதிமுக அணிகள் இணையும் என நம்புகிறேன் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

சென்னை திருவொற்றியூரில் பாலம் திறப்பு விழாவில் கலந்துகொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்

“தமிழக அரசு நீட் நுழைவுத் தேர்வு குறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறது. இந்த தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்குமாறு பிரதமரிடம் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

நீட் விவகாரத்தில் மாநில அரசை பொறுத்தவரை மாணவர்கள் நலம் பாதிக்காத வகையில் கவனத்தோடு செயல்படுகிறது,” என்றார்.

அதிமுக அணிகள் குறித்த கேள்விக்கு “அதிமுக அணிகள் இணையும் என்று நம்புகிறேன்,” என்றார்.

மேலும் படிக்க