• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

‘அதிமுக அணிகள் இணையும்’ நம்பிக்கை தெரிவித்த முதல்வர்

July 28, 2017 தண்டோரா குழு

அதிமுக அணிகள் இணையும் என நம்புகிறேன் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

சென்னை திருவொற்றியூரில் பாலம் திறப்பு விழாவில் கலந்துகொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்

“தமிழக அரசு நீட் நுழைவுத் தேர்வு குறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறது. இந்த தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்குமாறு பிரதமரிடம் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

நீட் விவகாரத்தில் மாநில அரசை பொறுத்தவரை மாணவர்கள் நலம் பாதிக்காத வகையில் கவனத்தோடு செயல்படுகிறது,” என்றார்.

அதிமுக அணிகள் குறித்த கேள்விக்கு “அதிமுக அணிகள் இணையும் என்று நம்புகிறேன்,” என்றார்.

மேலும் படிக்க