June 12, 2019
தண்டோரா குழு
நடிகர் ராதாரவி திமுகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.
அதிமுகவில் இருந்த நடிகர் ராதாரவி ஜெயலலிதா மறைவிற்கு பிறகு திமுகவில் இணைந்தார். அதன் பின் பல்வேறு கூட்டங்களில் அதிமுகவை கடுமையாக விமர்சித்து வந்தார்.இதற்கிடையில், அண்மையில் நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் ராதா ரவி திமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து ராதாரவி அதிமுகவில் இணைந்தார். அதிமுகவில் நான் 18 ஆண்டுகளாக இருந்துள்ளேன், திமுகவில் எனக்கு திருப்தி இல்லை என ராதா ரவி கூறியுள்ளார்.