• Download mobile app
02 Nov 2025, SundayEdition - 3553
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அதிமுகவில் துவங்கியது மோதல் தினகரன் ஆதரவாளர்கள் சரமாரி கேள்வி !

August 10, 2017 தண்டோரா குழு

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் துணைப் பொது செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டது சட்டவிரோதமானது என அவரை அதிமுகவில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றினர்.

இதற்கிடையில், தினகரன் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சசிகலாவால் கட்சியில் பதவிபெற்ற செங்கோட்டையன், சண்முகம், ஜெயக்குமார் பதவியில் இருந்து விலக வேண்டும். சசிகலாவால் நியமிக்கப்பட்ட துணை பொதுச் செயலாளருக்கு நிர்வாகிகளை நியமிக்க உரிமை உண்டு என எம்எல்ஏ தங்கதமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

அதைப்போல் தினகரன் பதவி வகிக்க இயலாது என்ற தீர்மானத்தை அதிமுக தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள்.தினகரன் பதவி செல்லாது என்றால், அவரை ஆர்.கே.நகர் தேர்தலின் போது வேட்பாளராக தேர்வு செய்தது ஏன்? என தினகரன் ஆதரவாளர், புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் படிக்க