• Download mobile app
05 Aug 2026, WednesdayEdition - 3829
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அதிபர் தொப்பியால் மாணவனுக்கு பிரச்சனை

February 6, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவின் அதிபர் டிரம்ப்பின் வாசகம் கொண்ட தொப்பியை அணிந்த மாணவனை மற்ற மாணவர்கள் தாக்கியுள்ளனர். இச்சம்பவம் அமெரிக்கா மிஸௌரி மாநிலத்தில் நடந்திருக்கிறது. மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் விடியோவில் பதிவாகி, வைரலாகப் பரவி வருகிறது.

அமெரிக்க அதிபராக பொறுபேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் தனது தேர்தல பிரசாரத்தின் போது ‘அமெரிக்காவை மீண்டும் பெரிய அளவில் உயர்த்திடுவோம்’ என்று கூறினார். அதிபர் தேர்தலில் அவர் வெற்றிவாகை சூடி, அதிபராகவும் பதவியேற்றார்.

ஆனால், தேர்தல் பிரசாரத்தின்போது மெக்ஸிகோ நாட்டு எல்லையில் சுவர் எழுப்பப்படும் என்றும் இஸ்லாமிய மக்களுக்கு எதிராகவும் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. அத்துடன் நில்லாமல் அதிபராகப் பதவியேர்ற பிறகு பிரசாரத்தின்போது கூறியதை செயல்படுத்தத் தொடங்கினார். இது போன்ற செயல்கள் அமெரிக்க மக்களிடையே வெறுப்பைத் துண்டியுள்ளன. மக்கள் டிரம்ப் கொள்கைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தத் தொடங்கிவிட்டனர்.

இத்தகைய நிலையில், “அமெரிக்காவை மீண்டும் பெரிய அளவில் உயர்த்துவோம்” என்று எழுதியிருந்த தொப்பியை அணிந்து கொண்டு பள்ளி வாகனத்தில் இருந்த கேவின் என்ற 12 வயது மாணவனை சக மாணவர்கள் தாக்கியுள்ளனர்.

கேவின் மிஸெளரி மாநிலத்தில் உள்ள பார்க்வே மாவட்டப் பள்ளியில் 6-வது வகுப்பு மாணவன். அவன் டொனால்ட் டிரம்ப் வாசகம் கொண்ட தொப்பியை அணிந்திருந்தான். அதைக் கண்ட இதர மாணவர்கள் கேவினை நோக்கி, “சுவர் கட்ட விரும்புகிறாயா?” என்று கூறியபடி தாக்கினர். மாணவர்கள் தாக்கிய காட்சி காணொளியில் வெளியானது.

இச்சம்பவம் குறித்து, கேவின் கூறுகையில், “பள்ளி வாகனத்தில் பயணம் செய்த போது, ஒரு மாணவன் என்னை கீழே தள்ளி அடித்தான். பிறகு வாகனத்தின் ஜன்னல் அருகே மீண்டும் தள்ளினான். வேறு வழியில்லாமல் அவனைத் தள்ளிவிட்டேன்” என்றான்.

பார்க்வே பள்ளி செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம். இதற்கு காரணமான மாணவர்கள் தண்டிக்கப்படுவார்கள். மாணவர்களுக்கு இடையே அமைதியான புரிதலைக் கற்றுக்கொடுக்க வழிவகுத்து வருகிறோம்” என்றார்.

மேலும் படிக்க