• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அதிக அளவில் ரூபாய் நோட்டுகளை அனுப்ப வேண்டும்

January 3, 2017 தண்டோரா குழு

கிராமப்புற பகுதிகளில், தேவைக்கு ஏற்ப ரூபாய் நோட்டுகளை அனுப்பி வைக்க வேண்டும் என வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி செவ்வாய்க் கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப ரூபாய் நோட்டுகள் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. அப்பகுதி மக்களுக்குத் தேவையான அளவு ரூபாய் நோட்டுகள் கிடைக்க 40 சதவீத நோட்டுகள் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என வங்கிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

வங்கிகளுக்கான அறிவுரைகள்:

கிராமப்புற வங்கி கிளைகளுக்குப் புதிய ரூபாய் நோட்டுகளை அனுப்பி வைக்க வேண்டும். தேவைக்கு ஏற்ப அணுகுமுறை அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் குறிப்பிட்ட சதவீதம் ரூபாய் நோட்டுகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அனைத்து வங்கி கருவூல மையங்களும் ரூ. 500 மற்றும் அதற்கு கீழ் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை வழங்க வேண்டும்.

தேவைக்கேற்ப ரூ.100 நோட்டுகள் வழங்கப்பட வேண்டும். தேவைக்கேற்ப நாணயங்களைத் தருவித்து, பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்.

இவ்வாறு ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

மேலும் படிக்க