• Download mobile app
08 Sep 2025, MondayEdition - 3498
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அடங்காத பசியால் காகிதங்களை உண்ணும் சிறுவன்

July 22, 2017 தண்டோரா குழு

அடங்காத பசி நோயால் பாதிக்கப்பட்ட 1௦ வயது சிறுவன், வீட்டில் கிடைக்கும் காகிதங்களை உண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளான்.

தென் ஆப்ரிக்கா புமலங்கா மாகாணத்திலுள்ள ஸ்டான்டர்டன் என்னும் இடத்தில் வசித்து வருகிறான் 1௦ வயது சிறுவன் காம்டேன். அந்த சிறுவனுக்கு பிரடர் வில்ஸ் சிண்ட்ரோம் (Prader Willis Syndrome) என்னும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளான்.

இந்த வியாதியால் பாதிக்கப்படுவோர் எவ்வளவு சாப்பிட்டாலும் பசி அடங்காது. இதனால் அதிக உடல் எடை, வளர்ச்சி குறைப்பாடு ஆகியவை ஏற்படுகிறது. பொதுவாக 1௦ வயது சிறுவர்களுடைய எடை 18 கிலோ இருக்கும். ஆனால் இவனுக்கு உடல் எடை 88 கிலோ.

எப்பொழுதும் அதிக பசியுடன் இருக்கும் அவன், கையில் எது கிடைத்தாலும் அதை சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளான். அவனுடைய உடல் எடை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதால், அவனால் முச்சு விடமுடியவில்லை. இதனால், அவனுக்கு செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டுள்ளது.

“இவனை நாங்கள் பல மருத்துவர்களிடம் காட்டினோம். ஆனால், எந்த குறையால் அவனுடைய உடல் எடை அதிகரித்து வருகிறது என்று அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. ப்ரேடோரியா நகரிலுள்ள ஸ்டீவ் பிகோ மருத்துவமனையில் உள்ள ஒரு மருத்துவர்தான் காம்டேனுக்கு ஏற்பட்டிருக்கும் வியாதி குறித்து கண்டுபிடித்தார்.

காலையில் நான்கு சீஸ் ரொட்டி சாப்பிடுவான். சுமார் ஒரு மணி நேரம் கழித்து மிஞ்சி இருக்கும் இரவு உணவை சாப்பிட்டு கோக் குடிப்பான். மதியம் இரண்டு பெரிய கோழி துண்டை சாப்பிடுவான். வீட்டிலிருக்கும் அனைத்து உணவு பொருட்களையும் மறைத்து வைக்கும் கட்டாயமும் ஏற்பட்டது.

சில வேளைகளில் கழிவறையில் இருக்கும் டாயலேட் பேப்பர்களை கூட சாப்பிட்டு விடுவான். என் மகனை நான் உயிருடன் பார்க்க வேண்டும் என்றால், அவனுக்கும் உணவு கட்டுப்பாட்டு முறையை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவத்துள்ளனர்.

சாதாரன குழந்தைகளைபோல் தன்னால் வாழ முடியவில்லையே என்ற மன சோர்வும் அவனிடம் காணப்படுகிறது. மற்ற குழந்தைகளை போல் தானும் வெளியே சென்று விளையாட வேண்டும் என்று என்னிடம் கூறி அழுவதும் உண்டு” என்று காம்டேனின் தாய் தெரிவித்தார்.

மேலும் படிக்க